×

விறகு கடை உரிமையாளரை தாக்க முயன்றவர் கைது

 

மதுரை, மே 1: மதுரை, மாட்டுத்தாவணியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (48). விறகுபேட்டையில் விறகு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த சரக்கு ஆட்டோவில் வந்த அவனியாபுரம், மார்கண்டசாமி கோயில் தெருவைச் சேர்ந்த வினோத் கண்ணன் (35), சுரேஷ்குமாரின் டூவீலர் மீது மோதியுள்ளார்.

இதை கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வினோத் கண்ணன் தனது சரக்கு ஆட்டோவில் இருந்த இரும்பு ராடால், சுரேஷ்குமாரை தாக்க முயன்றுள்ளார். அவரை, அக்கம் பக்கத்திலிருந்த கடைகாரர்கள் தடுத்துள்ளனர். சுரேஷ்குமார் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மாட்டுத்தாவணி போலீசார் வினோத் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post விறகு கடை உரிமையாளரை தாக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Suresh Kumar ,Mattuthavani, Madurai ,Virakupettai ,Vinod Kannan ,Markandasamy Koil Street, Avaniyapuram ,
× RELATED சாத்தான்குளம் அருகே மது விற்றவர் கைது